செய்தி
சிங்கள இனத்தை இல்லாதொழிக்கச் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் முயற்சி – பௌத்த தேரர்
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 11:37.40 AM GMT ]
சிங்கள பௌத்தர்களை இல்லாதொழிப்பதற்கு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாக கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்தர்களை ஒடுக்குவதற்கு சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த இளந்தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளும் திட்டமொன்று பிலியந்தலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
குறித்த பௌத்த பிக்கு உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குடும்பக் கட்டுப்பாட்டுச் சத்திர சிகிச்சைகளை வைத்தியசாலை நிர்வாகம் கைவிட்டது.

அவுஸ்திரேலியாவில் செவ்வியந்தியர்கள் ஒடுக்கப்பட்டதனைப் போன்று சிங்களவர்களை இல்லாதொழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நந்தரத்ன தேரர் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
சுமார் 600 பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டுச் சத்திர சிகிச்சைகளுக்காகப் பதிவு செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை  சிங்கள இனத்தை இல்லாதொழிப்பதற்காக இந்தச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை எனவும், இலங்கையில் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் குடும்பக் கட்டுப்பாட்டுச் சத்திரசிகிச்சையே பிலியந்தலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார சேவை ஆணையாளர் நயாகம் அஜித் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 06:03.35 PM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013 19:02:27 GMT ]
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வருகிற 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 14:07:12 GMT ]
பாகிஸ்தான் நடுவர் அசாத் ராப், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் எந்தெந்த போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என தெரிய வந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 11:59:42 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.