திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்தர்களை ஒடுக்குவதற்கு சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த இளந்தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளும் திட்டமொன்று பிலியந்தலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பௌத்த பிக்கு உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குடும்பக் கட்டுப்பாட்டுச் சத்திர சிகிச்சைகளை வைத்தியசாலை நிர்வாகம் கைவிட்டது.
அவுஸ்திரேலியாவில் செவ்வியந்தியர்கள் ஒடுக்கப்பட்டதனைப் போன்று சிங்களவர்களை இல்லாதொழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நந்தரத்ன தேரர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சுமார் 600 பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டுச் சத்திர சிகிச்சைகளுக்காகப் பதிவு செய்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சிங்கள இனத்தை இல்லாதொழிப்பதற்காக இந்தச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை எனவும், இலங்கையில் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் குடும்பக் கட்டுப்பாட்டுச் சத்திரசிகிச்சையே பிலியந்தலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார சேவை ஆணையாளர் நயாகம் அஜித் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.